பக்கங்கள்

home

  • kathaikal
  • kavithaikal
  • vinothamana padangal

ennavalin varnanaikal!

இனியவளே !
உன் மேனி மலர்போல் இருக்கலாம் ..!
ஆனால்....!
மலரென்று வர்ணிக்க மாட்டேன் !
ஏனெனில் ...
நீ நந்தவனத்து சொந்தமாகிவிடுவாய் ..!
உன் குரல் தேன்போலே இனிக்கலாம் ....
ஆனால்....!
தேன் என்று வர்ணிக்கமட்டேன்!
ஏனெனில் ...
நீ தேனீக்களுக்கு சொந்தமாகிவிடுவாய் ...!
உன் முகம் முழுமதி போலே இருக்கலாம் !
ஆனால் ...!
நிலவென்று  வர்ணிக்க மாட்டேன் !
ஏனெனில் ...
நீ ஆகாயத்திற்கு சொந்தமாகிவிடுவாய் ..!
உன் இதழ்கள் கனிந்த கோவைபோலே இருக்கலாம் !
ஆனால் ...!
கோவைப்பழம் என்று வர்ணிக்க மாட்டேன் !
ஏனெனில் ...
நீ கொடிகளுக்கு சொந்தமாகி விடுவாய் ..!
உன் பற்கள் முத்துப்போலே பிரகாசிக்கலாம் !
ஆனால் ...!
முத்துஎன்று வர்ணிக்க மாட்டேன் !
ஏனெனில் ...
நீ கடலுக்கு சொந்தமாகிவிடுவாய் ..!
இப்படி இருக்கும் போது....
உன்னை எப்படி வர்ணிப்பேன் கண்ணே !?
ஆம் .....!
உன்னை "நான்" என்றுதான் வர்ணிக்கவேண்டும் !
ஏனெனில் ....
நீ எனக்கு மட்டுமே சொந்தமாக இருக்கவேண்டும் !!!
நிச்சயமாக ...!!!!!

andrum endrum ennaval...!

அன்று ...!
சித்திரச் சோலையிலே என்னுடன் ....
சிங்கரத்துடன் சிரித்து திரிந்த ...
என்னவள் !
கடற்கரைச் சாரலில் கவின்மிகு வேளையில் ...
கட்டியனைத்த ....
என்னவள் !
மங்கிய நிலவொளியில் மதி மயங்கிய ....
நிலையில் என்மடியில் ....
என்னவள் !
தாமரைத் தடாகத்தில் தனிமையான நேரத்தில் ....
என்னுடன் ஒருமித்து நீராடிய ....
என்னவள் !
சத்தமில்லாமல் பல இரவு என்னுடன் ....
சங்கமித்து மெத்தை சுகம் கண்ட ....
என்னவள் !
ஆனால் இன்று .....?!
மாற்றான் மனைவி என்ற பெயரில் ....
அவன் மடியில் ....
என்னவள் .....!!!!!????

ilaiudirkalam

பசுமையாய் பூத்துக்குலுங்கிய மரங்களே ...!
இன்று ஏன்.....?
பட்ட மரமாய் காட்சி தருகிறீர்கள் ...???
எந்தக் காதலன் உங்கள் பசுமை ......
ஆடையை களைந்தது...?
எந்தக் கணவனால் வரதட்சணை என்ற பெயரில் ....
சூரையடப்பட்டீர்கள் .....??
எந்தக் கள்வன் உங்கள் அங்கங்களின் .....
அழகு பசுமையை கவர்ந்தது ...???
ஓ.............
இது இலையுதிர்காலமோ .....!!!!!

en kanavil india

சத்தியம் செய்வோமடா ...!
அகண்ட பாரதத்தின் நல்லுணர்வை காக்க ...
அதனை நித்தமும் கொள்வோமடா !!!?
லஞ்சத்தை வரவேற்கும் வஞ்சகனின் ...
தோலுரித்து பஞ்சனை செய்வோமடா ...!
அதனில் படுத்துக் களிப்போமடா !
ஏழை பெண்ணின் வாழ்வில் சூசகம் செய்திடும் ...
எத்தனைக் கொள்வோமடா ...!
அவன் நெஞ்சில் எட்டி உதைப்போமடா !
தெளிந்த மக்களை மாக்களாய் மாற்றும்....
சாதியை ஒழிப்போமாடா ...!
புறம் கொண்ட சகதியில் எறிவோமடா!
இருள்கொண்ட இந்தியாவை தடுத்து நிறுத்தி ..!?
புறம் கொள்ளச் செய்வோமடா !
அறம்கொண்ட பாரதத்தின் நல்வரவை ...!
இருகரம் கொண்டு ஏற்ப்போமடா ...!
மனதில் ...!!
களங்கங்கள் போனதடா!!!!!!

kadhal illai sadhel

அண்டத்தை யாண்ட மாமன்னரும் போரிலே ....
மாமிசப் பிண்டமாய் போயின போதிலும் ..!
துண்டிக்கப் பட்ட கரங்கள் கூட ......
தூயவளின் பெயரெழுதும் குருதியினலே ...!!!

துண்டிக்கப்பட தலைகளின் எண்ணிக்கை ....
தொண்ணூறு கோடி யாயின போதிலும் ..!
கண்டத்தின் கடைசி கட்டத்திலும் ....
கருவிழியால் நாமத்தையே உரைக்கும் நாவும் ...!!!

ஓடுகின்ற அந்த ரத்த வெள்ளத்திலும் ....
அவள் உருவ நிறம்தான் தெரியும் உறுதியினாலே ..!
பாடுகின்ற புலவரெல்லாம் பாடிவையுங்கள் ....
காதல் இல்லை சாதல் என்ற மந்திரத்தையே ..!!!

iraivanidam korikkai...

இறைவா..!
என்னை நீராக படைத்திருக்க கூடாதா..?
என்னவள் நீராடும்போது அவள் அங்கங்களில் ...
ஒட்டி உறவாடி இருப்பேனே ...!!
என்னை தென்றலாக படைத்திருக்க கூடாதா ...?
என்னவளின் தேக எழில் மணத்தை சற்றேனும் ....
நுகர்ந்து பார்த்திருப்பேனே ...!!
என்னை மலர்களாக படைத்திருக்க கூடாதா ...?
என்னவளின் கார்கூந்தலில் ஒரு பொழுதேனும் ...
வாழ்ந்து வாடி உதிர்ந்திருப்பேனே....!!
என்னை காலனிகளாக படைத்திருக்க கூடாதா ...?
என்னவளின் பிஞ்சு பாதங்களை ...
என் மேனியில் தாங்கிஇருப்பேனே ...!
இத்தனை விடுத்து என்னை ......
மனிதனாக படைத்து விட்டீர்களே ....??????!

iniyavalin...ninaivil....!!

என்னவளே..
உன் இனிய பெயரை ...
உச்சரிக்கும் போதெல்லாம் ...
எனக்குள் ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி...!
நீ ....
பேசும் போதெல்லாம் ....
பச்சை குழந்தையின் மழலை மொழி..!!!!?
நீ ...
நடக்கும் போது உன் கால்விரல்களின் அசைவு ....
வீணை தந்தியில் விரல்களின் விளையாட்டு....!!!?
என்னுடைய மூச்சுக்காற்றும் மோகனம்
பாடுகிறது...!!!!?
ஆம் ......!
என் இதயத்தில் உள்ள உன்னை ...
கண்ட மகிழ்ச்சியில் .....!!!!!!!